தலையணைக்கும் நமக்கும் எப்போதும் ஒரு நெருக்கமான உறவு இருந்துட்டே இருக்கும்.
எப்படின்னு கேக்கிறீங்களா?
அம்மா மடியில் படுத்திருப்பதைப் போல அமைதியை கொடுக்கும்.
மனைவியின் தலை துவட்டல் போல அன்பு காட்டும்.
நண்பனின் தோளில் சாய்ந்து அழுவது போல் ஆறுதல் அளிக்கும்.
சில சமயம் வெளியூரில் தங்கும் போது வேறு தலகாணி வைத்து படுத்தா, தூக்கம் வராது.
சின்ன வயசுல அடிக்கடி தலகாணிக்காக என் தம்பிகளோட பெரிய சண்டையே நடக்கும். புது உறைக்காக நல்ல தலாணி உறையை வேணுமின்னே கிழிச்சதும் உண்டு.
[...]
ஜனவரி 23rd, 2008- க்கானத் தொகுப்பு
தலையணை வாசம்
Posted in அனுபவம், குறிச்சொல் இடப்பட்டது உறை, தலகாணி, தலையணை, வாசம் on ஜனவரி 23, 2008 | 16 மறுமொழிகள் »



