காட்டுக்குள் மூங்கில்களாலான அறை, மிகச்சிறந்த உணவு, அருமையான விருந்தோம்பல், மனதொத்த நண்பர்கள், சிறு மழையும், கடுங்குளிருமாய் கழிந்தன மூன்று நாட்கள்.
அடர்வனத்துக்குள் நான்கு மணி நேர நள்ளிரவுப் பயணம். வனவிலங்குகள் பல காணக்கிடைத்தன. யானைக்கூட்டமொன்று துரத்தியது. நள்ளிரவாகையால் விலங்குகளை தெளிவாக படமெடுக்க இயலவில்லை.
உங்களை பாத்தா ரெம்ப பொறாமையா இருக்கு. 🙂
சந்தர்ப்பம் வாய்த்தது. அவ்வளவு தான் நாதாஸ்!
என்னமோ போங்க நல்லாயிருந்தா சரி.ஒரு வார்த்தை ம்ஹும் இருக்கட்டும்.
வேறென்ன வ.எ தான் 🙂
🙂 சொல்லியிருந்தா வரவா போறீங்க இலக்கியன். இனி நீங்க ஒரு வருசமோ, ரெண்டு வருசமோ, காத்திருக்கணும்.
உள்ளே இருக்கும் ஆசை. படங்களை பார்த்ததும் அடைந்த திருப்தி.
நன்றி ஜோதிஜி.
\\நாடோடி இலக்கியன்
என்னமோ போங்க நல்லாயிருந்தா சரி.ஒரு வார்த்தை ம்ஹும் இருக்கட்டும்.
வேறென்ன வ.எ தான் 🙂 \\
வழிமொழிகிறேன் 🙂
வாங்க சிவாண்ணே! எப்போ போகலாம் சொல்லுங்க. கிளம்பிடுவோம்.
நானும் அதை வழிமொழிகிறேன்
🙂 நன்றி!
// நள்ளிரவாகையால் //
அண்ணாச்சி கூட சேர்ற எல்லோரும் இப்படி ஆயிடறீங்க. ஹிஹிஹிஹி…
வார்த்தைகளை சேர்த்து சேர்த்து எழுதுவதை சொல்கிறேன். அவர் தான் ”எண்ணிக்கொண்டிருக்கையிலேவனது” அப்டின்னு எழுதுவாரு.
நல்ல விசயம் தானே கார்க்கி! 🙂
அருமையான இடத்தில் தங்கியிருந்திருக்கிறீர்கள்!
நாங்கள் இருந்த இடத்தில் தொடர்ந்து மழை!
நாங்கள் இருந்த இடத்தில் மிக ரம்மியமான சீதோசண நிலை.
வாழுறீங்க இப்படி அப்பப்ப சுத்திகிட்டு….
நள்ளிரவாகையால் விலங்குகளை தெளிவாக படமெடுக்க இயலவில்லை. //
துரத்தின யானைகிட்ட இருந்து தப்பி உயிர் பிழைச்சதை எழுதாம அங்கே படமெடுக்காதது தான் உங்களுக்கு வருத்தமாயா….
அட! நீங்களும் ஒரு வாரம் ஊட்டி வந்தீங்களே!
துரத்திய யானையைப் பற்றி செல்வேந்திரன் எழுதுவார்.
அண்ணா எப்படி போறதுன்னு சொன்னா நாங்களும் போவோம்ல….
நீ போகாத இடம் ஏதாவது இருக்கா தம்பி?
நல்லா இருந்தா சரி…
நல்லா தான் இருக்கோம்….. 🙂
படங்கள் அழகா இருக்கு…
நன்றி யாழ்!
என்ஜாய் மாடி.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா’ஜி’
புகைப்படங்கள் அருமை… தொடருங்கள்…
நன்றி கிருஷ்ண பிரபு!
//யானைக்கூட்டமொன்று துரத்தியது. //
அடடா! வெயிலான் ஓடியதை பார்க்க கொடுத்து வைக்கலையே ஹி ஹி ஹி
நாங்க வண்டியில ஏறிட்டோமே! ஹி ஹி ஹி
எங்க ஊரு அடர்கானகபுலியை விட ரொம்ப டேஞ்சரா யானை?:)) அடர்கானகபுலி கூடயே மூன்றுநாள் இருந்துட்டீங்க, இனி சிங்கம் புலி எல்லாம் பிசாத்து மேட்டர்:)
எதிர்பார்த்தேன் 🙂
அடர்கானகப் புலி இப்போ சமவெளி மான்!
அன்பின் வெயிலான், படங்களுடன் அட்டகாசமான பதிவு. கோவையில் ஓசை அமைப்பு புகைப்படக் கண்காட்சியையும், டாகுமெண்டரி திரையிடல்களையும் நிகழ்த்தி வருகிறது. நாம் பார்த்த ஒவ்வொரு விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயரையும், விசித்திர குணாம்சங்களையும், காட்டிற்கு அவற்றின் பங்களிப்பினையும் ஓசையின் வாயிலாக அறிந்து விழிகள் விரிந்தேன். கழுதைப்புலி பற்றிய நீள் கட்டுரையொன்றும், தமிழ்நாட்டு யானைகள் தமிழரல்ல…! என்ற தலைப்பிலுமாக எழுதி வருகிறேன். தீராநதியில் வந்த ஓசை காளிதாஸின் நேர்காணல் இணையத்தில் கிடைக்கிறது. காடு குறித்த புரிதல்களை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக இருக்கிறது.
வெறும் படங்கள் மட்டும் தான் இப்போ. பதிவு இனிமேல் தான்.
நீல வர்ண ஆகாச பிண்ணனியில் சுந்தரராமசாமி ரேஞ்சுக்கு எடுத்த புகைப்படமெல்லாம் இருக்க ஸ்டாம்ப் சைஸில் மூஞ்சி கழுவாத படத்தைத்தான் போடனுமா… 🙂
அந்த படங்களெல்லாம் உங்களுக்காக விட்டு வச்சிருக்கேன் 🙂
இது ஒரு அருமையான அனுபவமா இருந்திருக்கும்னு நம்பறேன்.
//வெறும் படங்கள் மட்டும் தான் இப்போ. பதிவு இனிமேல் தான்//
பதிவோடு, இன்னும் நிறைய படங்களையும் வெளியிடுவீங்களா ?
பதிவு வந்துட்டே இருக்கு கதிர்! நன்றி.
ஆஹா நல்ல டிரிப்தான் போல.
கதிர் சும்மா ஹிந்திபட ஹீரோமாதிரி இருக்காரே!
கலக்குங்க தல!
ஹீரோ மாதிரி இல்லை. கதிர் ஹீரோவே தான் 🙂