புதிய தலைமுறை – வீடு

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தினர், ’வீடு’ என்ற தொகுப்பில் இடம் பெறும் தனி நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்காக வீட்டைப் படம்பிடிக்க வந்தனர்.

இயக்குநர். க்ருஷ், தொகுப்பாளர். விஷ்ணு, ஒளிப்பதிவாளர். ஆனந்த் ஆகிய நண்பர்கள் முதல் நாளே சென்னையிலிருந்து, விருதுநகர் வந்து தங்கும் விடுதியில் தங்கி, மறுநாள், காலை வீட்டுக்கு வந்து சிறப்பாக படப்பிடிப்பும், நேர்காணலும் நடத்தி முடித்து, மிக அருமையான காணொலியை ஒலிபரப்பினர்.

01.01.2023ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி, வீடு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான காணொளியின் சுட்டி கீழே…….

https://youtu.be/4epS2WchkBk

அன்பின் சகோதரர். பரிசல் கிருஷ்ணா,

நண்பர்கள். க்ருஷ், விஷ்ணு, ஆனந்த் மற்றும் தணிகைவேல் மற்றும்

பி.டி.ப்ரைம் குழுவினருக்கு நன்றி!

பங்குனிப் பொங்கல்

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

எங்க ஊர்ல திருவிழா.

ஊர்ல பங்குனிப் பொங்கல்.

ஊர்ல நோன்பி.

ஊர்ல கோயில் கொடை.

ஊர்ல கொடி ஏத்தியிருக்கு.

ஊர்ல பொங்கச் சாட்டியிருக்கு.

எல்லா ஊர்க்காரங்களுக்கும் புரியிற மாதிரி சொல்லியாச்சு.

எல்லாரும் வாங்க.  திருவிழாவை வேடிக்கை பார்த்துட்டு வரலாம்.

படங்களுக்கு நன்றி – VHND & MYVNR.